+1 (647) 283 1972

olftamilchaplaincy@gmail.com

பதிவுகள்

நிகழ்வுகள்

ஞாயிறு திருப்பலி நேரமாற்றம்

தற்பொழுது நடைமுறையில் இருக்கம் பகுதி 2 கோவிட் 19 தளர்வுகளின் வரையறைகள் எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து பகுதி 3க்கு செல்ல இருக்கும் நிலையில் நாமும் எமது திருப்பலி நேரங்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை யூலை மாதம் 18ம் திகதியிலிருந்து மாலை 3.30மணிக்கு மாற்றம் செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்தும் கோவிட் வரையறைகளை கடைப்பிடித்து திருப்பலிகளில் பங்குபற்ற அழைத்து நிற்கிறேன். ஆலயக்கதவுகள் பூட்டப்படமாட்டாது. நீங்கள் சற்று தமதாமாக வந்தாலும் திருப்பலியில் பங்குபற்ற முடியும் என்பதை அறியத்தருகின்றேன்.

வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து திருமுழுக்கு அருட்சாதனத்தை திருப்பலிக்கு முன் 2.30 மணிக்கு கொடுக்க ஆரம்பிக்கிறேன். கோவிட் வரையறைகள் நடைமுறையில் இருப்பதனால், திருமுழுக்கில் ஆகக் கூடியது 20பேர் பங்குபற்ற முடியும். திருமுழுக்கு அருட்சாதனத்தில் பங்குபற்றுபவர்கள் தொடர்ந்து திருப்பலியில் பங்குபற்றிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.